டிடிவி தினகரனை தோற்கடிக்க எடப்பாடியார் உள்குத்து வேலையா?

வெள்ளி, 17 மார்ச் 2017 (00:02 IST)
வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சசிகலா அணியின் வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வெற்றி பெற்றால் இவர்தான் அடுத்த முதல்வர் என்பதில் சந்தேகம் இல்லை என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 


இந்நிலையில் ஆர்கே நகரில் டிடிவி தினகரன் தோல்வி அடைந்தால்தான் தன்னுடைய முதல்வர் பதவி தப்பும் என்ற காரணத்தினால் முதல்வர் எடப்பாடியாரே தினகரனை தோற்கடிக்க உள்குத்து வேலை பார்ப்பதாக அரசியல் கிசுகிசு எழுந்துள்ளது.

முதல்வர் எடப்பாடியார் தனக்கு நெருக்கமானவர்கள் மூலமாக தினகரனுக்கு எதிராக தொகுதியில் பிரச்சாரம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. எனவே தேர்தலுக்கு பின்னர் தினகரன் தோற்றாலும் ஜெயித்தாலும் எடப்பாடியின் பதவி நீட்டிப்பது சந்தேகம் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்