தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் அவரின் நெருங்கிய தோழி சசிகலாவை அமர வைக்க பெரும்பாலான அதிமுகவின் குரல் கொடுத்து வருகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் பல இடங்களில் சசிகலாவை முன்னிறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் சசிகலாவிற்கு புரட்சித் தோழி என்ற பட்டத்தை கொடுத்துள்ள அதிமுகவினர், பேனரில் ஜெயலலிதாவின் படத்தை சிறியதாக அச்சடித்துள்ளனர்.