அரசியல் வட்டாரங்கள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், பன்னீர்செல்வம் தரப்பும், சசிகலா தரப்பும் தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் முறையிட்டனர். சசிகலா - பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பன்னீர் செல்வத்திற்கு ஒவ்வொருவராக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு அதிமுக எம்.பி்.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் எம்.பி. சத்தியபாமா முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சத்தியபாமா கூறுகையில், ‘‘ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட நபர்களுக்கு பதவி தரப்படுகிறது. ஜெயலலிதாவிற்குதான் மக்கள் வாக்களித்தார்கள். முதல்வர் பன்னீர் செல்வத்திற்குதான் மக்கள் ஆதரவு இருக்கிறது. ஜெயலலிதா செயல்படுத்த நினைத்த திட்டங்களை பன்னீர் செல்வம் நிறைவேற்றுவார்’’ என்று தெரிவித்துள்ளார்.