ஊரடங்கால் ரயில் பாதைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு ! செடி கொடிகளால் மூடும் அவலம்!

திங்கள், 13 ஏப்ரல் 2020 (15:25 IST)
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 21 நாட்களாக அறிவிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படாததால் பாதைகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகெங்கும் 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 1,13,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அனைத்தும்  ஊரடங்கை அறிவித்துள்ளன. அதனால் ரயில்கள், விமானம் மற்றும் பேருந்துகள் ஆகியவை இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ரயில்பாதைகளை செடி கொடிகளால் மூடப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இலங்கையில் இதுபோல ஒரு இடத்தில் ரயில்பாதையை செடி கொடிகள் மூடியுள்ள புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டால் மேலும் பல இடங்களில் இதுபோல பாதைகள் மூடும் அபாயம் ஏற்படும் எனத் தெரிகிறது. அதனால் ஊரடங்கு விலக்கப்பட்டாலும் பாதைகள் சோதனை செய்யபப்ட்ட பின்னரே ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்