பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளியில் 6 தலீபான் தீவிரவாதிகள் கடந்த 16ஆம் தேதி புகுந்து, தலைமையாசிரியர், 132 குழந்தைகள் உள்பட 148 பேரை சுட்டுக்கொலை செய்தது, உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒசாமா மெக்மூத் பேசுகையில், "பெஷாவர் தாக்குதலால் எங்களது இதயம் வலி மற்றும் வருத்தத்தால் வெடித்துவிட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் குற்றம் மற்றும் கொடூமைகள் எல்லைத் தாண்டிவிட்டது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
நாம், அல்லாவின் எதிரியான அமெரிக்கா, அமெரிக்காவின் சொல்லாட்சியார்கள் மற்றும் அடிமை ராணுவத்திற்கு எதிராக துப்பாக்கி ஏந்த வேண்டும், குழந்தைகள் மற்றும் நமது முஸ்லீம் மக்கள் இலக்காக கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.