சவுதி அரேபியாவில் ரோசனா அல் டீனி(20) என்ற இளம்பெண் பூனை, நாய்குட்டிகளை வளர்ப்பது போல சிங்கம், சிறுத்தைகளை செல்லபிராணிகளாக வளர்த்து வருகிறார். அவைகளை கொஞ்சி விளையாடுவது போல் உள்ள வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.
எனது அன்றாட வாழக்கை அவைகளுடனே கழிகின்றன. இதற்கு எனது நெருக்கமானவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது அவர்கள் எனக்கு ஆதரவாகவே பேசுகின்றனர். என்னதான் விலங்குகளுக்கு மனிதர்களைப் போல மூளை கிடையாது என்றாலும் அவைகளுக்கும் இதயம், உணர்வுகள் உள்ளன, என்று கூறினார்.