வழுக்கை தலையில் தங்கம்: இது ஆண்களுக்கு மட்டுமே!!

வியாழன், 8 ஜூன் 2017 (11:03 IST)
வழுக்கை தலையாக இருக்கும் ஆண்களின் தலையில் தங்கம் இருக்கும் என்ற மூட நம்பிக்கை மொசாம்பிக் நாட்டில் நிலவி வருகிறது.


 
 
அதிலும் குறிப்பாக மிலாங்கே மாவட்டத்தில் தங்கம் எடுப்பதற்காக வழுக்கை தலை கொண்டுள்ள ஆண்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியாய் உள்ளது.
 
மொசாம்பிக் நாட்டில் வழுக்கை தலையாக இருக்கும் 3 ஆண்களை தங்கம் எடுக்க வேண்டும் என்பதற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
 
இதனால், வழுக்கை தலை உள்ள ஆண்கள் அச்சத்தில் உள்ளனர். அந்நாட்டு போலீஸாரும் இது குறித்து தீவிர விசாரணையிலும் அதனை தடுப்பதற்கு பல முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்