இந்நிலையில், ஏமனில் உள்ள ராஸ் அப்பாஸ் முகாமில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது அங்கு ராணுவ சீருடையில் வந்த ஒரு நபர், தனது உடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில், 14 பேர் அந்த இடத்திலயே உடல் சிதறி பலியானார்கள். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதி அமைப்பு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.