திருமணத்திற்கு மறுநாள் இரவு அன்று முதல் மனைவியும், சிறுமியும் சேர்ந்து சமைத்துள்ளனர். அதன் பிறகு சாப்பிட்ட உமர் வாயில் நுரை தள்ளி பலியானார். அவரை சிறுமிதான் விஷம் வைத்து கொலை செய்ததாக போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், உமர் சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. மேலும் சிறுமியை நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என்றும், அவரை சிறுவர் நீதிமன்றத்தில் தான் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.