நியூயார்க் ரிசர்வ் வங்கியை தகர்க்க திட்டமிட்ட தீவிரவாதி கைது
வியாழன், 18 அக்டோபர் 2012 (15:18 IST)
நியூயார்க்கில் உள்ள ரிசர்வ் வங்கி மீது குண்டு வீசி தகர்க்க முயற்சித்த வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாதியை அமெரிக்க மத்திய புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.
சுமார் 450 கிலோ கொண்ட பேரழிவை ஏற்படுத்த கூடிய ஆயுதங்களை பயன்படுத்தி ரிசர்வ் வங்கியை தகர்க்க திட்டமிட்ட 21 வயது மிக்க குவாஸி முகமது ரெஸ்வனுல் அஹ்சன் நபீஸ் என்ற தீவிரவாதி, அல் கய்தா ஆதரவோடு செயல்பட்டு வந்தவர் என்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சதி திட்டம் நிறைவேறி இருந்தால் ஒரு மைல்கல் தூரம் வரையிலான கட்டிடங்கள் தரைமட்டமாகியிருக்க கூடும். மேலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்க கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அஹ்சன் நபீஸ் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என புலனாய்வு துறையினர் கூறியுள்ளனர்.
அல் கய்தாவின் திட்டத்தின்படி அஹ்சன் நபீஸ் நியூயார்க் பங்கு சந்தை மற்றும் அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்டவர்களை குறிவைத்துள்ளதாகவும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.