* சென்னாவுடன் சிறிது உப்பு சேர்த்து 4 விசில் கொடுத்து வேக விடவும். பாசுமதி அரிசியை களைந்து 1/2 கப் தண்ணீர் விட்டு 1/2 மணி நேரம் ஊற விடவும்.
* ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணை காய்ந்தவுடன் கிராம்பு, ஏலக்காய், பட்டை தாளிக்கவும். பிறகு வெங்காயம், போட்டு வதங்கியதும், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள், கொத்தமல்லி, புதினா, வேகவைத்த சென்னா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* பின்னர் தயிர் சேர்த்து 2 நிமிடம் கொதி வந்தவுடன் ஊறவைத்த அரிசி (தண்ணீருடன்) உப்பு சேர்த்து குக்கரை மூடவும். 1 விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 2 நிமிடம் கழித்து இறக்கவும். தயிர் பச்சிடியுடன் நன்றாக இருக்கும்.