விக்னேஷ் சிவன் தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார். இதில் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ப்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை குறித்து விக்னேஷ் சிவன் பேட்டி அளித்துள்ளார்.
அதிலும் முக்கியமாக நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அவருக்கு பதில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இது குறித்து கேள்விக்கு பதில் அளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
அவர் கூறியதாவது, நயன்தாரா நாயகி என்று கூறப்பட்டது வெறும் வதந்தியே, படத்தின் கதைப்படி கீர்த்தி சுரேஷ்தான் முதலில் கமிட் செய்யப்பட்ட நாயகி. கீர்த்தி ஒரு மிடில் கிளாஸ் பெண்ணாக நடிக்கிறார்.
இதுவரை சூர்யாவுடன் நடிக்காத ஒரு நாயகி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற காரணத்தால் அவரை தேர்வு செய்தோம் என கூறினார்.