சாய்தரம் தேஜ் எப்படி இருக்கிறார்? அப்போலோ அறிக்கை

சனி, 11 செப்டம்பர் 2021 (13:12 IST)
விபத்தில் சிக்கிய நடிகர் சாய்தரம் தேஜ் உடல் நலம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது அப்போலோ மருத்துவமனை. 
 
சிரஞ்சீவியின் சகோதரி மகனும் இளம் நடிகருமான சாய்தரம் தேஜ், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்குள்ளாகியுள்ளார். இதில் அவருக்கு கண் மற்றும் நெஞ்சு பகுதிகளில் அடிபட்டுள்ளது. ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இருந்ததால் அவருக்கு தலையில் அடிபடவில்லை.
 
இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை அவரது உடல் நலம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு... 
 
பைக் விபத்தில் படுகாயமடைந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது. சாய் தரம் தேஜின் முக்கிய உறுப்புகள் சிறப்பாக வேலை செய்கிறது. நடிகர் சாய் தரம் தேஜின் உடல்நிலை குறித்த அடுத்த மருத்துவ அறிக்கை நாளை வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்