ஷங்கர் படத்தில் இணைந்த எஸ் ஜே சூர்யா கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

திங்கள், 12 செப்டம்பர் 2022 (15:03 IST)
ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தில் வில்லனாக தற்போது இயக்குனர் & நடிகர் எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிப்பது குறித்து “ நான் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த போது ஷங்கர் சாரின் செட்டுக்கு சென்றுள்ளேன். நண்பன் படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தேன். தற்போது வில்லனாக. அதே எனர்ஜி, வேலை வாங்கும் திறன், அனைவரிடம் இருந்தும் சிறந்ததைப் பெறும் ஆற்றல். எப்போதும் உங்களிடம் இருந்து ரசிகனாகவும், நடிகனாகவும் கற்றுக் கொண்டு வருகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்