குத்திட்டேன், கொன்னுட்டேன்: லாஸ்லியாவின் கோபத்திற்கு காரணம் என்ன?

வியாழன், 18 ஜூலை 2019 (09:09 IST)
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக கவின், லாஸ்லியா, சாக்சி என ஒரு முக்கோண காதல் கதை நடந்து வருகிறது. இருவரில் யாரை தவிர்ப்பது? யாரை ஏற்று கொள்வது என்று புரியாமல் கவின் ஒருபுறம் தவித்து கொண்டிருக்க, இன்னொரு புறம் இருவருமே கவினை விட்டு ஒதுங்கி போக நினைக்கின்றனர்.,
 
இந்த நிலையில் இன்று சாக்சி, இதய வடிவில் ஒரு சப்பாத்தியை போடுகிறார். அந்த சப்பாத்தி கவினுக்கு என தெரிய வந்ததும் அந்த சப்பாத்தியை கத்தியால் குத்திய லாஸ்லியா, 'குத்திட்டேன், கொன்னுட்டேன்' என்று கூறுகிறார். இதனால் ஒருபுறம் ஷெரின் திட்ட, இன்னொருபுறம் சாக்சி அதிர்ச்சி அடைகிறார்.
 
இந்த நிலையில் லாஸ்லியாவிடம் தர்ஷன், 'அப்படியெல்லாம் செய்யாதே என்று கூற அதற்கு லாஸ்லியா 'நான் அப்படித்தான் செய்வேன்' என்று கூறுகிறார். அப்போது அங்கு வரும் ஷெரின் 'அவள் ஒண்ணும் சின்னக்குழந்தை இல்லை' என்று தர்ஷனிடம் கூறுகிறார்
 
பிக்பாஸ் வீட்டில் சில நாட்களாக அமைதியாக இருந்த லாஸ்லியா, கமல்ஹாசனின் அறிவுரைக்கு பின் தற்போது கொஞ்சம் அதிகமாகவே பேச ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

#Day25 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/tp7tmH4ak0

— Vijay Television (@vijaytelevision) July 18, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்