மலையாளத்தில் துணை நடிகையாக இருந்த லட்சுமி மேனனை தமிழ் சினிமாதான் ஹீரோயினாக்கியது. இப்போது இவர் தமிழின் முன்னணி நடிகை. இந்த பிரபலம் காரணமாகதான் ஜோஷி தன்னுடைய படத்தில் லட்சுமி மேனனை நாயகியாக்கினார். தாய்மொழியில் நாயகியாக நடித்துள்ள படம் வெற்றி பெற்றால் தனது திறமையை நிரூபித்தது போலிருக்கும் என நினைக்கிறார் லட்சுமி மேனன்.
இந்த இரு படங்களிலும் நடிக்க கால்ஷீட் கேட்டு அவரை அணுகிய போது பிளஸ் டூ பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தாராம். நடிக்க முடியாது என்று லட்சுமி மேனன் சொன்ன போது, பரவாயில்லை, உங்களுக்காக படப்பிடிப்பை தள்ளி வைக்கிறோம் என்றிருக்கிறார்கள் இரு படத்தின் இயக்குனர்களும். அப்படி பரீட்சைக்கு நடுவில் நடித்த படங்கள்தான் இன்று வெளியாகின்றன.