செயின் பறிப்பு படத்துக்கு செம டிமாண்ட்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (12:46 IST)
ஆள் படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணனின் அடுத்தப் படைப்பு, மெட்ரோ. எப்படியும் வரிச்சலுகை கிடைக்கப் போவதில்லை என்று தொரிந்தே ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளார். 


 

ஆனால், தணிக்கைக்குழு சான்றிதழே தர முடியாது என்று படக்குழுவை அதிர வைத்தது.
 
மெட்ரோ செயின் பறிப்பு குற்றத்தையும், குற்றவாளிகளையும் மையப்படுத்தியது. வன்முறை மிக அதிகம். அத்துடன், செயின் பறிப்பது எப்படி என்று சொல்லித் தரும்வகையில் காட்சிகள் உள்ளதாக தணிக்கைக்குழு சான்றிதழ் தர மறுத்தது. பிறகு மறுதணிக்கைக்கு அனுப்பி ஏ சான்றிதழ் பெற்றனர். படம் வரும் 24 -ஆம் தேதி திரைக்கு வருகிறது.
 
இந்தப் படத்தின் கன்னட உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. பாபி சிம்ஹா நடித்துள்ள இப்படத்தின் பிற மொழி உரிமைகளுக்கு செம டிமாண்டாம்.
 
செக்சுக்கு அடுத்து வன்முறைக்குதான் உலக அளவில் மார்க்கெட் உள்ளது என்பது உண்மைதான்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
 
அடுத்த கட்டுரையில்