மெட்ரோ செயின் பறிப்பு குற்றத்தையும், குற்றவாளிகளையும் மையப்படுத்தியது. வன்முறை மிக அதிகம். அத்துடன், செயின் பறிப்பது எப்படி என்று சொல்லித் தரும்வகையில் காட்சிகள் உள்ளதாக தணிக்கைக்குழு சான்றிதழ் தர மறுத்தது. பிறகு மறுதணிக்கைக்கு அனுப்பி ஏ சான்றிதழ் பெற்றனர். படம் வரும் 24 -ஆம் தேதி திரைக்கு வருகிறது.