உடைந்தது பாலாவின் ஐவர் கூட்டணி

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (13:02 IST)
வேலராமமூர்த்தி எழுதிய நாவலின் சிறு பகுதியை படமாக்க இருப்பதாக பாலா அறிவித்திருந்தார். விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா ஆகியோர் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.


 


இந்நிலையில், இந்த ஐவர் கூட்டணி படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் பாலா.
 
ஐந்து முன்னணி நடிகர்களை ஒன்றிணைப்பதில் ஏற்பட்ட சிரமமும், படத்தின் ஸ்கிரிப்டை உருவாக்க மேலும் காலஅவகாசம் தேவைப்பட்டதாலும் படத்தை பாலா தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. 
 
அதற்குமுன் புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்க பாலா திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலைகளில் அவர் பிஸியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்