சமுத்திரகனியின் ட்விட்டர் செய்திக்கு மவுசு அதிகம். அதிலும், கபாலி இம்ப்ரஸ் பண்ணலை, ஏமாற்றம் என்று ட்விட் போட்டதிலிருந்து கான்ட்ரவர்சியாக ஏதாவது எழுதியிருப்பாரோ என்று நிருபர்கள் கூட்டம் அவரது ட்விட்டர் பக்கத்தைதான் மொய்க்கிறது.
பொதுவாக இதுபோன்ற விஷயங்களில் யாருக்கும் ஆதரவு தராமல் நடுநிலை வகிப்பதுதான் சினிமா புத்திசாலிகளின் முடிவாக இருக்கும். இயக்குனரான சமுத்திரகனி, சக இயக்குனர் விஜய்யை இப்படி விமர்சித்திருக்கிறாரே என்று விசாரித்தால், அது சமுத்திரகனியின் ட்விட்டர் கணக்கு கிடையாதாம். அவர் பெயரில் ஏதோ மோசடி பேர்வழி உருவாக்கிய கணக்காம்.