பிரசாந்த் நடிகராக அறிமுகமான வைகாசி பொறந்தாச்சி படத்தில் இடம்பெற்ற, தண்ணி குடம் எடுத்து பாடலை எழுதியவர், பாடலாசிரியர் காளிதாசன்.
காளிதாசனுக்கு தற்போது 68 வயதாகிறது. உடல்நலம் குன்றிய நிலையில், திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரு ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வருகிறார். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குடும்பத்தார் தவித்து வந்தனர்.
காளிதாசனின் நிலைகுறித்து அறிந்த விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலம் 25 ஆயிரம் ரூபாயை காளிதாசனின் மருத்துவச் செலவுகளுக்கு அளிப்பதாக அறிவித்தார். அதன்படி விஷாலின் நற்பணி இயக்கத்தினர் அந்தத் தொகையை காளிதாசனின் மனைவியிடம் வழங்கினர்.