சமீபத்தில் அவர் நடித்த தெலுங்குப் படம் அனாமிகா (தமிழில் நீ எங்கே என் அன்பே) வெளியானது. நயன்தாராதான் அந்தப் படத்தின் நாயகன், நாயகி எல்லாம். இருந்தும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். தெலுங்கு சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு தடை போடும் அளவுக்கு இந்தப் பிரச்சனை பெரிதாக வெடித்தது.
இவ்வளவு சர்ச்சைகளுக்குப் பிறகும் தனது கொள்கையில் உறுதியுடன் இருக்கிறார் நயன்தாரா. படத்தில் ஒப்பந்தமாகும் போதே விளம்பர நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன், கலந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தவோ, புகார் செய்யவோ கூடாது என எழுதித் தந்துதான் கால்ஷீட்டே தருகிறார்.