நற்பணிகள் அதிகம் செய்கிறீர்களே...?
அதுக்கு அம்மாவின் மனசுதான் காரணம். நான் கொடுக்கலாம் என்றாலும் என் குடும்பம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். சென்னையில்தானே நான் இவ்வளவு பெரிய நடிகையாகியிருக்கிறேன். அந்த மக்களுக்குக் கொடுக்கும்போது சந்தோஷமாக இருந்தது. வெள்ள சமயத்தில் இந்த உலகமே அழிந்து போனால் எப்படியிருக்குமோ அந்த மனநிலையில்தான் இருந்தேன். ராஜபாளையத்தில் ஒரு கிராமத்தில் டாய்லெட் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். விஷால் உதவலாம் என்றார், உடனே பண்ணினேன்.