இது குறித்து கூறிய அவர், “நாம் சுய ஆட்சி கோரி போராடி வருவதால் தமிழர்கள் மீது சிங்களவர்கள் மத்தியில் பயம் உண்டு. இந்த பயத்தை விடுதலைப்புலிகள் ஏற்படுத்தவில்லை. ஆரம்ப காலம் தொட்டே சிங்கள மக்கள் தமிழர்கள் மீது பயம் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். இதனை மகாவம்சமும் சுட்டிக்காட்டுகின்றது.