ஒலிம்பிக் சுடர்: அயான் அலி, ஜஸ்பால் ரானா விலகல்!

வியாழன், 17 ஏப்ரல் 2008 (17:32 IST)
ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திலிருந்து இசை அமைப்பாளர் அயான் அலி, துப்பாக்கி சுடுதல் வீரர் ஜஸ்பால் ரானா ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்த 70 பங்கேற்பாளர்கள் பட்டியலில் இந்த இருவர் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இருவரும் கடைசி நேரத்தில் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ஜஸ்பால் ரானா விலகியதற்கான காரணம் தெரியவில்லை என்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஓட்டத்திற்கு நிதி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் தனது தரப்பில் 6 பேரை சுடர் ஓட்டத்தில் பங்கேற்க பரிந்துரை செய்தது, அதில் இசையமைப்பாளர் அயான் அலியும் ஒருவர். சுடர் ஓட்டத்திற்கு முன்னதாக நடந்த விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் திடீரென விலகியுள்ளார்.

இவர்கள் விலகியதற்கான சரியான காரணம் எதையும் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்