கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு விருது

திங்கள், 28 ஏப்ரல் 2008 (11:48 IST)
லண்ட‌ன்: லண்டனில் நடைபெற்ற தொழில்பூர்வ கால்பந்து வீரர்கள் கூட்டமைப்பின் (பி.எஃப்.ஏ) இந்த ஆண்டி‌ற்கான சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கால்பந்து லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு விளையாடி வரு‌கிறா‌ர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் 2ஆவது அரையிறுதிப் போட்டிக்கு ரொனால்டோ தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டிருந்ததால் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.

அவருக்கு பதிலாக மான்செஸ்டர் யுனைடெட் மேலாளர் அலெக்ஸ் ஃபெர்கூசனிடம் இந்த விருது கையளிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்