துலீப் கோப்பை: மேற்கு மண்டலம் 303/5

வியாழன், 5 பிப்ரவரி 2009 (20:18 IST)
சென்னையில் நடைபெறும் துலீப் கோப்பை 5 நாள் கிரிக்கெட் போட்டியில் தெற்கு மண்டல அணிக்கு எதிராக மேற்கு மண்டல அணி தன் முதல் இன்னிங்ஸில், முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை அணி வீரர் ரஹானே 109 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இவருடன் திரிவேதி ரன் எதுவும் எடுக்காமல் விளையாடி வருகிறார்.

முன்னதாக வாசிம் ஜாஃபர் 69 ரன்களையும் பார்த்தீவ் படேல் 27 ரன்களையும், புஜாரா 14 ரன்களையும், தாகர் 73 ரன்களையும், நாயர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

தெற்கு மண்டலம் சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜகதி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்