பாண்ட்யாவின் திறமையை கோலி வீணடிக்கிறார்… ஜடேஜா குற்றச்சாட்டு!

வியாழன், 18 மார்ச் 2021 (15:47 IST)
இந்திய அணியின் கேப்டன் பாண்ட்யாவின் திறமையை வீணடித்து விடுகிறார் என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான பங்களிப்பு எதையும் செய்யவில்லை. பவுலிங்கிலும் அவர் செயல்பாடு மிகவும் சொதப்பலாக உள்ளது. இந்நிலையில் அவரின் திறமையை கோலிதான் வீணடிக்கிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

அதில் ‘பாண்ட்யாவை 6 அல்லது 7 ஆவது இடத்தில் இறக்கி அவரின் திறமையை எல்லாம் கோலி வீணடிக்கிறார். பாண்ட்யா இறங்கிவரும் போது டெத் ஓவர்கள் மட்டுமே உள்ளன. மிடில் ஓவர்களில் அவர் இறங்கினால் நமக்கு சாதகமாக இருக்கும். பலவீனமான பவுலர்களை எதிர்கொள்ள பாண்ட்யாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்