மாற்று திறனாளி போல் நடித்து 48 பேரை கொன்ற தீவிரவாதி

செவ்வாய், 20 டிசம்பர் 2016 (13:52 IST)
ஏமன் நாட்டில், தற்கொலை படை தீவிரவாதி, மாற்று திறனாளி போல் வேடமணிந்து துறைமுகத்தின் உள்ளே நுழைந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.


 

 
ஏமன் நாட்டில் நேற்று ஏடன் நகரின் தெற்குத் துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பள பணம் பெற தலைமையகத்தில் திரண்டு உள்ளனர். தற்கொலை படை தீவிரவாதி, உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு மாற்று திறனாளி போல் வேடமணிந்து அந்த கூட்டத்தின் உள்ளே நுழைந்தார்.
 
கூட்டத்தில் வெடிக்கச் செய்ததில் அங்கு கூடியிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்