துலாம்:

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (19:57 IST)
webdunia photoWD
உச்சி மீது வான் இடிந்து விழுந்தாலும் அஞ்ச மாட்டீர்கள். நெற்றிக் கண்ணையே திறந்தாலும் நிமிர்ந்து நின்று நினைத்ததை சொல்லிவிடும் ஆற்றலுடையவர்களும் நீங்கள்தான்.

இதுவரை உங்களின் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ராகுவும், ராசிக்கு பதினோராவது வீட்டில் கேதுவும் அமர்ந்துகொண்டு மனநிறைவை கொடுத்தவர்கள் இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 வரை உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து நிம்மதியாக தூங்க முடியாமல் செய்தார். இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டிலே வந்தமர்கிறார். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள்.

11. 6. 2008 முதல் 21. 4. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் தடைபட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பிள்ளைகள் உங்களின் குணத்தைப் புரிந்துக் கொண்டு நடப்பார்கள். அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சில காரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நண்பர்கள் வீட்டின் சுபகாரியங்களில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்திலிருந்த சிக்கல்கள் நீங்கி கைக்கு வந்து சேரும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சிலர் நீதிமன்றத்திற்குச் செல்லாமலேயே பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள். கன்னிப் பெண்கள் பெற்றோரின் ஆலோசனைக் கேட்டு நடப்பது நல்லது. தூக்கமின்மை, கனவுத் தொல்லைகள் நீங்கும்.

தாயாரின் உடல் நலத்தில் சிறு சிறு கோளாறுகள் வந்து நீங்கும். தாய்வழி உறவினர்கள் அனுசரித்து போவார்கள்.

பழைய கடனை தீர்ப்பதற்குப் புதிய வழிப் பிறக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனத்தை சிதறவிடாமல் செல்வது நல்லது. 22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் பணவரவு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு நவீன ரக வாகனத்தை வாங்குவீர்கள். எனினும் கொஞ்சம் கவனமாக இயக்குங்கள்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். வேலையாட்களின் கடின உழைப்பால் லாபம் அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிப்பீர்கள். மருந்து, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களால் அதிக லாபம் பெறுவீர்கள். உடலுக்கு ஏற்ற உணவுகளை உண்பது நல்லது. யோகா, தியானம் செய்யுங்கள். உத்யோகத்தில் யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சக ஊழியர்களை ஆச்சர்யப்படுத்துவீர்கள்.

கேதுவின் பலன்கள் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல்...

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களைத் தன்னால் முடிந்த வரை கொடுத்து வந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்கிறார். தன்னம்பிக்கை போக்கு அதிகரிக்கும். எடுத்த வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். வேலையில்லாமல் திண்டாடியவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். வேற்று மதத்தினரால் புதிய அனுபவங்களை காண்பீர்கள். தந்தை வழி உறவினர்களால் கொஞ்சம் செலவுகளும், அலைச்சலும் வந்து நீங்கும்.

26. 8. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள கால கட்டங்களில் தடைபட்ட பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். கணவன்- மனைவிக்குள் நிலவிய வீண் வாக்குவாத போக்கு மாறும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சொத்து சம்பந்தமான முக்கிய படிவங்களில் கையெழுத்திடும் போது ஒரு முறைக்கு பல முறை படித்துப் பார்த்து கவனமுடன் கையாளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். வி. ஐ. பி.க்களின் சந்திப்பு நிகழும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அக்கம்- பக்கம் வீட்டாருடன் அனுசரித்துப் போவீர்கள்.

உத்யோகத்தில் வேலை பளு அதிகரித்தாலும் தெரியாத சில வேலைகளையும் கற்றுக் கொள்ளும் புதிய அனுபவம் உண்டாகும். உயர் அதிகாரியின் ஆதரவால் பதவி உயர்வு, சம்பள உயர்வுக் கிடைக்கும். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். சக ஊழியர்களும் உங்களை எதிர்ப்பார்கள். மேலதிகாரியைப் பற்றி சக ஊழியர்களின் மத்தியில் விமர்சனம் செய்ய வேண்டாம். பதவி உயர்வால் ஊர் விட்டு ஊர் மாற்றம் அடைவீர்கள். மாணவர்கள் வகுப்பறையில் கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்:
நாகப்பட்டினத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு நீலாயத்தாட்சியம்மை உடனுறை ஸ்ரீ ஆதிபுராணேஸ்வரர், ஸ்ரீ காயாரோகணேஸ்வரரை பூமாலை அணிவித்து வணங்குங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்