‌விஜயகா‌ந்‌த் ‌நிலை எ‌ப்படி இரு‌க்‌கிறது?

செவ்வாய், 25 ஜனவரி 2011 (18:18 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: விஜயகாந்த் சேலம் கூட்டத்திலும் எ‌ந்த முடிவையு‌ம் அறிவிக்கவில்லை. அதேபோல விழுப்புரத்திலும் ஒன்றும் சொல்லவில்லை. இந்த நிலையில், அவர் எந்த மாதிரியான முடிவெடுத்து எந்தப் பக்கம் போவார்? தனியாக நிற்பாரா? அவருடைய நிலை எப்படி இருக்கும்.

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: விஜயகாந்த் சித்திரை நட்சத்திரம் துலாம் ராசியில் வருகிறார். தற்போது துலாம் ராசிக்கு சாதகமான நேரம் கிடையாது. துலாம் என்பது தராசு தட்டு. ஆகையில் ஏற்ற இறக்கங்கள், அசைவுகள் இருந்துகொண்டே இருக்கும்.

ஏழரைச் சனியும் தற்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது. அவருக்கு செவ்வாய், ராகு, குரு, சனி இதெல்லாம் முடிந்து புதன் திசையும் நடந்து கொண்டிருக்கிறது.

பொதுவாக புதன் திசை நடப்பவர்களுக்கு கூட்டு முயற்சி ஒத்துவரும். அவ்வாறு கூட்டணி சேரும் போது சாதகமான நிலை உருவாக வாய்ப்புகள் உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்