விளையாட்டு வீரர்கள் மீதான குற்றச்சாற்றுகள்?

புதன், 8 செப்டம்பர் 2010 (16:01 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: தற்போது விளையாட்டுகளில் பாலியல் குற்றச்சாற்றுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு வேளை உலகின் மற்ற பகுதிகளில் அதிகம் இல்லையென்றாலும், இந்தியாவில் அதிக அளவில் இருக்கிறது. இது எதனால்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப‌.‌வி‌த்யாதர‌ன்: நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். புதன் விளையாட்டிற்குரிய கிரகம். தற்போது புதன் மோசமாக இருப்பதால் இதுபோன்றெல்லாம் நடக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

தற்போதும் புதன் வக்கிரமாக, அதாவது சரியில்லாத நட்சத்திரங்களில் போய்க் கொண்டிருக்கிறார். புதனுடைய ஆதிக்கம் சாதகமாக இல்லை. அதனால்தான் இந்த நிலை இருக்கிறது. செப்டம்பர் 4 வரை இதுபோல வக்கிரமாக இருக்கிறார்.

அதனால் இந்த மாதிரி பாலியல் குற்றச்சாற்றுகளில் நிறைய வீரர்கள் சிக்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஏனென்றால் புதன் தற்போது பகை வீடுகளில் போய்க் கொணருக்கிறார். அதனால்தான் விளையாட்டு வீரர்கள் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

முரளி என்றாலே புதன்தான். அவர் இந்த நேரத்தில் ஓய்வு அறிவித்துவிட்டார் பாருங்கள். பொதுவாகவே ஆனி, ஆடி மாதங்களில் புதன் பலவீனமாக இருப்பார். இந்த காலகட்டத்தில் விளையாட்டு முன்னால் வீரர்களுக்கும், இன்னால் வீரர்களுக்கும் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்படும். அந்த நேரத்தில் பாவ கிரகங்களுடன் புதன் சேரும்போது இன்னும் பாதிப்பு அதிகமாக இருக்கும். சுப கிரகங்களுடன் சேரும் போது பாதிப்பு குறைவாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்