ஓரினச் சேர்க்கையால் அவதிப்பட்டு வருகிறேன்? இதிலிருந்த மீள முடியுமா?

புதன், 25 பிப்ரவரி 2009 (17:22 IST)
வாசகர் கேள்வி: ஐயா, நான் கடந்த சில மாத‌ங்களாக ஓரினச் சேர்க்கையால் பாதிக்கப்பட்டு உள்ளேன். இதிலிருந்து மீள வேண்டும் என நான் பலமுறை நினைத்தாலும், அப்பழக்கத்தில் இருந்து என்னால் விடுபட முடியவில்லை. இப்பழக்கத்தில் இருந்து என்னால் விடுபட முடியுமா? எனது பிறந்த தேதி 06/10/1986; நேரம் காலை 11.37 மணி.

வாசகர் கொடுத்த தேதியை வைத்து எமது ஜோதிடர் அவரது ஜாதகத்தைக் கணித்துள்ளார். அதன்படி வாசகர் விசாகம் நட்சத்திரம், துலாம் ராசியில் பிறந்துள்ளது தெரிய வருகிறது. ஜோதிடர் கணித்த ஜாதகமும் வாசகர் பார்வைக்காக இந்தக் கட்டுரையில் வைத்துள்ளோம்.

WD


பதில்: இவரது நட்சத்திரம், ராசியிலேயே மோதல் நிலை காணப்படுகிறது. சுக்கிரனின் ராசியிலும், குருவின் லக்னத்திலும் இவர் பிறந்துள்ளதால்தான் இப்படிக் கூறுகிறேன்.

மேலும், 3ஆம் இடம் போகஸ்தானம் ஆகும். இந்த ஜாதகருக்கு 3இல் குரு வக்ரமாகி அமர்ந்துள்ளார். இதுமட்டுமின்றி 3க்கு உரிய கிரகமான சனி, 12இல் மறைந்துள்ளார். இப்படி சனி மறைந்ததால் இவருக்கு ஓரினச் சேர்க்கை எண்ணம் தோன்றியுள்ளது.

பொதுவாக லக்னத்திற்கு முன்னும், பின்னும் பாவ கிரகங்கள் அமரக் கூடாது என்ற ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனால் இவரது ஜாதகத்திற்கு முன்னும், பின்னும் செவ்வாய், சனி அமர்ந்துள்ளனர். இதுவும் ஓரினச் சேர்க்கை எண்ணத்திற்கு காரணமாக கருதப்படுகிறது.

ஒருவரது நடத்தையைப் பற்றி அவரது ஜாதகத்தில் 4ஆம் இடமே சொல்கிறது. அந்த வகையில் இந்த ஜாதகருக்கு 4இல் ராகு அமர்ந்துள்ளார். மேலும் 4க்கு உரிய கிரகமான குரு, 3இல் (பின்தங்கி) வக்ரமாகி அமர்ந்துள்ளார். இப்படி காணப்பட்டால் இந்த ஜாதகருக்கு இயல்புக்கு புறம்பான எண்ணங்கள் தோன்றும்.

தசை வகையில் பார்த்தால் இவருக்கு குரு தசை முடிந்து தற்போது சனி தசை நடந்து வருகிறது. இவருக்கு போகக்காரன் சனி (3ஆம் இடத்திற்கு உரியவர்) என்பதால், சனி தசை துவங்கியது முதலே இவருக்கு ஓரினச் சேர்க்குரிய பழக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வரும் அக்டோபர் (27/09/2009) முதல் இவருக்கு ஏழரைச் சனியும் துவங்க உள்ளது. அப்போதைய காலகட்டத்தில் இவருக்கு ஓரினச் சேர்க்கை எண்ணம் அதிகரிக்கும் என்றாலும் அதிலிருந்து விடுபட இவர் முயற்சிக்கு வேண்டும்.

டிசம்பர் 18ஆம் தேதி பெயர்ச்சியாகும் குரு, இந்த ஜாதகர் பிறக்கும் போது எந்த இடத்தில் (கும்பம்) இருந்தாரோ அந்த இடத்திற்கே வருகிறார். அந்தக் காலகட்டத்தில் இவருக்கு நிச்சயம் மனமாற்றம் ஏற்படும். ஓரினச் சேர்க்கை எண்ணத்தில் இருந்து விடுபடுவார்.

எனினும், டிசம்பருக்கு முன்பாக சனி தசை மற்றும் ஏழரைச் சனி ஆகியவை இவருக்கு நடப்பதால் உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஓரினச்சேர்க்க பழக்கத்தை விட்டுவிடுவது சாலச் சிறந்தது. இல்லாவிட்டால் மோசமான உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.