ஈரோடு நாடார்மேடு பகுதியில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் 10 வயதுள்ள மாற்று திறனாளி சிறுவனுடன் தள்ளாடியபடியே சென்றுள்ளார். செல்லும் வழியில் திடீரென்று அந்த சிறுவனை ரோட்டில் உட்கார வைத்து விட்டு அருகில் உள்ள மதுபான கடைக்கு சென்ற அவர் மது குடித்துள்ளார். பிறகு வெகு நேரமாகியும் அந்த பெண் திரும்பி வரவில்லை.
அதன்பின்னர் அந்த சிறுவன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த பெண் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இந்த சிறுவன் எனது மகன் தான். அவன் பெயர் அய்யப்பன் எனவே அவனை என்னிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு மருத்துவமனை ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த பெண் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் வந்தார். ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஷிப்டு மாறும் போது உள்ள பரபரப்பான சூழ்நிலையில் யாருக்கும் தெரியாமல் அந்த பெண், அந்த சிறுவனை தூக்கி கொண்டு ஓடி விட்டார்.