இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா இது குறித்து பேசியபோது, ஆரம்பத்தில் இருந்து முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்போலோ நிர்வாகம் எந்தத் தகவலையும் முறையாகச் சொல்லவில்லை. முதல்வருக்கு வெளிப்படையான சிகிச்சை வேண்டும் என்று முதலில் இருந்தே கூறி நான் வந்ததை யாரும் கேட்கவில்லை.
கட்சியினர் அனைவரையும் அந்த பெண்மணி தான் ஆட்டிவித்துக் கொண்டிருக்கிறார். அவரை விசாரித்தால், ஜெயலலிதா மரணம் குறித்த அனைத்து தகவல்களும் வெளியே வரும். சிபிஐ விசாரணை இது குறித்து நடத்தப்பட வேண்டும். மேலும் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசுவேன் என்றார்.