குற்றால சீசன் ஜூன் துவங்கி ஆகஸ்ட் வரை தொடர்ந்து இருக்கும். இதனால் குற்றால அருவியை நோக்கி தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருவார்கள். நேற்றும் இதமான சூழல் சூழல் நிலவியது. இதனால், சுற்றுலா பயணிகள் அனைவரும் முக்கிய அருவியில் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.
இந்நிலையில், இந்த அருவியில் மதுரையை சேர்ந்த சுற்றுலா பயணி பாலகிருஷ்ணன் (45) என்பவரும் குளித்து கொண்டிருந்தார். அப்போது, மலையிலிருந்து பெரிய பாறாங்கல் உருண்டு வந்து உடைந்ததில் 3 துண்டாக உடைந்து பாலகிருஷ்ணன் தலையில் விழுந்தது.