102 நாட்களாக உயராத பெட்ரோல் விலை இன்று உயர்வா?

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (06:57 IST)
சென்னையில் கடந்த 102 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 
இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று 103வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
எனவே இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 101.40  எனவும் இன்று சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
தற்போது 5 மாநில தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அடுத்து இந்த தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக உயரும் என அஞ்சப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்