இந்நிலையில், இவரது செல்போனுக்கு பெண் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தனது கணவரின் சொத்துக்களை சிவக்குமார் வைத்துள்ளதாகவும், அதனால், தனக்கு மாதந்தோறும் பணம் தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருபட்டினம் காவல் நிலையத்தில், வி.எம்.சி. சிவக்குமார் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.