ஜூன் 16- சட்டசபையில் கவர்னர் உரை

ஞாயிறு, 5 ஜூன் 2016 (08:39 IST)
தமிழக சட்டசபையில் ஜூன் 16ஆம் தேதி தமிழக கவர்னர் உரை நிகழ்த்துகிறார்.


 

 
தமிழகத்தில், அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்பு, புதிய சட்டசபை கூட்டத்தின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவது வழக்கம்.
 
மேலும், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வுக்குப் பின்பு இந்த முதல் கூட்டம் 16 ஆம் தேதி நடைபெறுவதால்,  அன்றைய தினம் தமிழக கவர்னர் ரோசய்யா உரையாற்றுகிறார்.
 
இதனையடுத்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன்பேரில் விவாதம் நடைபெறும்.  

வெப்துனியாவைப் படிக்கவும்