தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக தேவையான சட்டப் பூர்வ நடவடிக்கைகளை விரைந்து எடுகக் வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. மேலும், சில சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.