இதனால் நள்ளிரவு 1 மணியளவில் கச்சிராயப் பாளையம் காவல்துறை ஆய்வாளர் ராஜகண்ணன், சின்னசேலம் காவல்துறை ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்டோர் காமராஜ் நகரில் உள்ள அய்யாசாமி வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்த தேவாவை தட்டி எழுப்பி, நடைபெறும் பிரச்சினைகளுக்கு எல்லாம் நீ தான் காரணம் என்று கூறி தேவாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் தேவாவை அடித்து இழுத்து சென்று ஜீப்பில் ஏற்ற முயன்றுள்ளனர்.