இதையடுத்து, அந்த விமானத்தில் இருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகளும் போலீஸாரும் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகம் படும் படி நடந்து கொண்ட செந்தில்குமார் என்ற பயணியை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் வைத்து இருந்த சூட்கேசில் மறைத்து வைத்து எடுத்து வந்த 2.5 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், மஸ்கட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராஜேஸ் என்ற பயணியிடமிருந்து 5 தங்க பிஸ்கட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த சில நாட்களாக தங்கம் கடத்தல் அதிகரித்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளை போலீஸாரும் சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.