தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியே வந்து சந்திரகுமார் எப்படி மக்கள் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினாரோ, அதேப்போல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பாவும் அடுத்ததாக மக்கள் அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதனையடுத்து சசிகலா புஷ்பா டெல்லியில் பெரிய பெரிய வழக்கறிஞர்களுடன் சட்ட ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில், மக்கள் தேமுதிக உருவாகி பின்னர் திமுகவுடன் இணைந்ததை போன்று, மக்கள் அதிமுகவை தொடங்கி, பின்னர் வேறு ஒரு கட்சியில் சேரலாம் என பேசியதாக கூறப்படுகிறது.