முடிந்தது 6 மாத சிறைத்தண்டனை: இன்று விடுதலையாகிறார் முன்னாள் நீதிபதி கர்ணன்

புதன், 20 டிசம்பர் 2017 (03:02 IST)
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய உத்தரவுகள் பிறப்பித்ததை அடுத்து அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விக்கப்பட்டது.

இதனையடுத்து தலைமறைவான நீதிபதி கர்ணன் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் அவருடைய தண்டனை காலம் இன்றுடன் முடிவடைவதால்  இன்று அவர் விடுதலை செய்யப்படவுள்ளார்

சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்தவுடன் அவர் அமைதியாக இருப்பாரா? அல்லது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவாரா? என்பது குறித்து அறிய ஊடகங்கள் தயார் நிலையில் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்