சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்,கடந்த ஜூன் 24 ம் தேதி, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். ஆனால், கொலைக்கு காரணமான குற்றவாளி குறித்து தகவல் கிடைக்காமல் போலீசார் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று, பாளையங்கோட்டையிலிருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
ஆம்புலன்ஸில் வந்த ராம்குமார் தன்னை போலீசார் என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்ற பயத்திலே இருந்துள்ளார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனையடுத்தே, அவர் பயம் தெளிந்துள்ளார்.