ராம்குமார் இனி பயன்படமாட்டான்

வியாழன், 8 செப்டம்பர் 2016 (11:27 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு சிறையில் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதால், இனி வெளியே வந்தாலும் பயன்படமாட்டான் என்று அவரது உறவினர்கள் கலவையுடன் உள்ளனர்.


 

 
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சிறையில் மிக அவதிப்பட்டு, பித்து பிடித்தவர் போல் காணப்படுவதாக கூறி வருகின்றனர்.
 
இதற்கிடையில் தமிழச்சி வெளியிட்ட தகவல்கள் மூலம் ஒரு தரப்பினர் ராம்குமார் அப்பாவி என்ற முடிவு வந்துள்ளனர். திலீபன் மகேந்திரன் சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை வெளிக்காட்டுவேன் என்று சபதம் எடுத்துள்ளார்.
 
ராம்குமாரின் உறவினர்கள், இனி எங்கள் பிள்ளை வெளியே வந்தாலும் பயன்படமாட்டான், அவனை பைத்தியமாக்கிதான் அனுப்புவார்கள் என்று கூறி கதறி அழுகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்