நடிகர் கமல் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என சில தினங்களுக்கு முன்னர் பேட்டியளித்தார். அவ்வளவு தான் தமிழக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக நடிகர் கமலை விமர்சித்தும், மிரட்டும் தொனியிலும் பேசி வருகின்றனர்.
இதனையடுத்து நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்நிலையில் இது குறித்து பேசிய தினகரனின் தீவிர ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், தமிழக அரசின் துறைகளில் ஊழல் நடக்கிறது என்றால் யார் செய்கிறார்கள் என்பதை கமல் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றார்.