மேலும், அவர் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், சேரி பிஹேவியர் என காயத்ரி ரகுராம் பேசியதற்கு, அதில் தவறில்லை என்கிற ரீதியில் கமல் கருத்து தெரிவித்து தனது சாதியத்தை அவர் வெளிப்படுத்தினார் எனவும் , முல்லைப் பெரியாறு, காவிரி நீர் பிரச்சனை, மீத்தேன் திட்டம் ஆகிய பிரச்சனைகளில் அவர் கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்ததின் காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.