இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதிகள் ரஞ்சனா பி.தேசாய் மற்றும் என்.வி.ரமணா விசாரித்தனர். அப்போது, மு.க. ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகள் கிரிமினல் குற்றச்சாட்டுகளாக இருப்பதால் வழக்கை முடிக்க கூடாது என தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.