அதில், 1997-ஆம் ஆண்டு அத்தை ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது நேரில் சென்று பார்க்க போனபோது வெளிப்படையாக பிரச்சனை குறித்து பேசினேன். அப்போது நீ குழந்தை உனக்கு ஒன்றும் தெரியாது. நீ வீட்டுக்கு போ நான் வெளியே வந்ததும் பார்க்கிறேன் என கண்டித்து அனுப்பினார். அதன் பின்னர் பலமுறை அவரை பார்க்க முயற்சித்தேன் ஆனால் காவலர்களால் துரத்தப்பட்டேன்.
எங்கள் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் கூடயெல்லாம் நடந்தது. எங்களை அவர்கள் வளர்த்த விதத்தையெல்லாம் கூறி அத்தையிடம் சண்டையிட்டேன். என்னை சமாதானப்படுத்துவதற்காக என்னுடன் 6 மணி நேரம் செலவழித்தார். பின்னர் வீட்டுக்கு போ நான் பின்னர் வந்து உன்னை பார்க்கிறேன் என்றார். அதுதான் அவரை நான் கடைசியாக பார்த்தது என கூறியுள்ளார் தீபா.